சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.16.75 ேகாடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மண்டபத்தின் பரப்பளவு 68,272 சதுர அடி. கட்டுமான பணி அனைத்தும் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.முதல் தளத்தில் 11 ஆயிரம் சதுர அடியில் 1000 பேர் அமர்ந்து திருமண நிகழ்ச்சியைக் காணும் வகையில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1927 சதுர அடியில் முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்த 80 இருக்கைகள் கொண்டதாகவும், 10,722 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடமும் உள்ளது.