சூளகிரி தாலுகாவில் கொள்ளு விளைச்சல் அமோகம்

சூளகிரி, ஜன.10:  சூளகிரி தாலுகாவில் சூளகிரி, மேடுபள்ளி, தியாகரனபள்ளி, கீரணப்பள்ளி, மேலுமலை, காலிங்காவரம், பேரிகை, திம்மசந்திரம், அத்திமும், காமன்தொட்டி, உத்தனபள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொள்ளு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொள்ளு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பருவமழை குறைவால் கடந்த ஆண்டில் குறைந்த பரப்பில் கொள்ளு பயிரிடப்பட்டது. இதனால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. இந்நிலையில், அனைத்து கிராமங்களிலும் கொள்ளு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கொள்ளு ₹30க்கு விற்பனையான நிலையில், நேற்று முதல் ₹40 என விற்பனையாகிறது. 

Related Stories: