நாகை. ஜன.10: நாகை தெற்கு மாவட்டம் நாகை ஒன்றியம் வடவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பொருளாளர் திருமலைச்சாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.