கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரியில், இந்தியாவின் தரமான பொது சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான ஆஷா திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் பங்கேற்று பேசினார். பன்னாட்டு பொது சங்க கூட்டமைப்பின் தெற்காசிய செயலாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆஷா மாவட்டத் தலைவர் செல்வமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், மாநில செயலாளர் சரவணன், இளைஞர் அணி செயலாளர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.