அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி சிராங்குடி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

நாகை,டிச.11: அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி சிலாங்குடி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் சிராங்குடி, கிராம மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் 100 நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்காதை கண்டித்தும்,  நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். சாலை மறியல் செய்தவர்களிடம் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சிவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் 100 நாள் வேலையில் சம்பள பாக்கி உள்ள அனைவருக்கும் உடன் சம்பளம் பட்டுவாடா செய்ய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பேசி உடன் சம்பள பட்டுவாடா செய்வதாகவும், நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் பேசுவதாக  உறுதியளித்தன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால்  நாகை-தஞ்சை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: