கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில், கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில், உலக மருந்தாளுநர் தினவிழா மற்றும் தேசிய மருந்தியல் வாரவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை மருந்தாளுநர் லட்சுமிபதி தலைமை வகித்தார். தலைமை மருந்தாளுநர்கள் சுரேஷ், கதிர்வேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பிரியாராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாநில தலைவர் சுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.