மனித உரிமைகள் தின கொண்டாட்டம்

வேப்பனஹள்ளி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் சங்க உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், வேப்பனஹள்ளியில் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மக்கள் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சேவை சங்க செயலாளர் கோபிநாத், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், வெங்கடேஷ், ரவி, சுரேஷ் மற்றும் முனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: