ஆலங்குளம், டிச. 11: நெல்லை, தென்காசி, இடைகால் பகுதிகளில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் நலன்கருதி கல்விநிறுவனங்கள் சார்பில் ஏராளமான பஸ்கள் ஆலங்குளத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் மாலை பள்ளி, கல்லூரி முடிந்ததும் ஆலங்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இரவு நேரங்களில் நிறுத்தப்படுவதும் விடுமுறை தினங்கள் தவிர்த்து மறுநாள் காலை மீண்டும் ஆலங்குளத்தில் இருந்து சம்பந்தபட்ட பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களைஏற்றிச்செல்வதும் வழக்கம். இதேபோல் ஆலங்குளம் பஸ் நிலையத்தின் மேல்புறம் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தென்காசியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ்சை கடந்த 8ம் தேதி டிரைவரான ஆலங்குளம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வீரணன் மகன் காமராஜ் நிறுத்திச் சென்றார்.