ஓசூர், நவ.29: ஓசூரில் குடியிருப்பு பகுதியில், மந்த கதியில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூரில் உள்ள ஏஎஸ்டி அட்கோ குடியிருப்பில், நூற்றுக்கும் ேமற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், பணிகள் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும், கழிவுநீர் குழாய் பதிக்க கால தாமதமாகி வருகிறது. அதேபோல் பிரதான சாலையில் தோண்டப்பட்ட கால்வாய், மூடப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.