சென்னை: சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு பிரான்சிஸ் ஆகிய மூன்று பேரும் எனது அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது செல்போனை பறித்துக் கொண்டு தகாத வார்த்தையால் பேசி கைவிலங்கு போட்டு வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.