சென்னை: கொளத்தூர் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியப்பா மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜேஷ்குமார். இவரது பெரியப்பா மகன் மகேந்திரன். அண்ணாநகரில் மெடிக்கல் நடத்தி வந்தார். ராஜேஷ்குமார் மருத்துவர் என்பதால் அவரது குடும்பம் நல்ல வசதியாக இருந்துள்ளது. ஆனால், இது மெடிக்கல் நடத்தி வந்த மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்தநிலையில், ராஜேஷ்குமாருக்கு வசதியான டாக்டருக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திருமணம் நடந்தால் ராஜேஷ்குமார் குடும்பத்தினர் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்று நினைத்து, மகேந்திரன் ராஜேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.