கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் மனு

நெல்லை, நவ.16:  ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி புதிய தமிழகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.புதிய தமிழகம் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் தங்கராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் டிஆர்ஓ முத்துராமலிங்கத்திடம் அளித்த மனு: தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டும். குடும்பர், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதியான், பள்ளர் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: