பெரம்பூர்: காசிமேடு, எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் முருகன் (45). லாரி பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் திடீரென இந்த கடை தீப்பிடித்து எரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தண்ணீர் ஊற்றி, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.