சென்னை: துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த மும்தாஜ் (34) என்ற பெண் சுற்றுலாப் பயணியாக துபாய்க்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.