சென்னை: அந்தமானில் இருந்து கோ ஏர் பயணிகள் விமானம் நேற்று காலை 7.45 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது. இதில், மும்பையை சேர்ந்த விஜய் குல்கர்னி (72), அவரது மனைவி ஆல்பா குல்கர்னி (62) உள்பட 152 பயணிகள் இருந்தனர். விமானம் காைல 9.30 மணியளவில் சென்னை வான்வெளியை கடந்து கொண்டிருந்தபோது, விஜய் குல்கர்னிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே விமானி, அருகில் இருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கி விமானம் தரை இறங்க அனுமதி கேட்டு அவசர அவசரமாக தரை இறக்கினார்.