ஆட்டையாம்பட்டி, நவ.8: ஆட்டையாம்பட்டி அருகே பைரோஜி மற்றும் புதுப்பாளையம் ஏரிக்கு, திருமணிமுத்தாற்றில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் திறந்து விடுவதால், எப்போதும் இந்த ஏரி நிரம்பியபடியே காட்சியளிக்கும். இந்த ஏரியை நம்பி புதுபாளையம், பைரோஜி, பிச்சம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில், திருமணிமுத்தாறில் இருந்து பைரோஜி ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில், பாலம்பட்டி அருகே வரும் தண்ணீர் வாய்க்காலில் புதிதாக ₹12லட்சம் மதிப்பீட்டில் மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கடந்த 2மாதங்களுக்கு முன் ஏரிக்கு தண்ணீர் செல்லாதவாறு தடுத்து வைத்துள்ளனர்.