பரமத்திவேலூர், நவ.8: ப.வேலூர் அருகே பட்டாசு வெடிப்பதில்இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கண்டிபாளையம் ஓங்காளியம்மன், பகவதி அம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக இரு சமூகத்தினர் இடையே மோதல் நிலவி வருகிறது. நேற்று அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எதிர் தரப்பினருக்கும், பன்னீர்செல்வம் தரப்பினருக்குமிடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியது.