சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் செல்போன், பணம் அபேஸ்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மஞ்சுளா (38). இவர், சென்னை மாநகர காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மஞ்சுளா சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கடைக்கு தனது ஸ்கூட்டரில் சென்றார். ஸ்கூட்டரை கடை எதிரே நிறுத்தி விட்டு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஸ்கூட்டர் அருகே நிற்பது போல் நடித்து, ஸ்கூட்டரில் தொங்கவிடப்பட்டிருந்த பையை எடுத்து சென்றுவிட்டனர். அந்த பையில் விலை உயர்ந்த செல்போன் ஒன்றும், ₹7500 பணம் இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: