கரூர், அக்.26: கரூர் நகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் அருகே கலைஞர் நகர் பகுதி உள்ளது. இப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மின்கம்பம் நடப்பட்டு மின்சப்ளை கொடுக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில், அடுத்தடுத்து குடியிருப்புகள் மற்றும் விரிவாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், அந்த மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கும் கடந்த 6 மாதமாக எரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கலைஞர் நகரை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் படர்ந்த பகுதியாக உள்ளன. குடியிருப்புகளின் பின்புற பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் நிலையில்,