சேலம், அக்.26: சேலம் அழகாபுரம் பகுதியில் நடந்த சென்ற 2 பெண்களிடம், 2014ம் ஆண்டு நகை பறித்த வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அர்ஜூன்அமர்குமார் ஷர்மா(30), பஞ்சாப்பை சேர்ந்த ரவிக்குமார்(31) ஆகியோரை அழகாபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். தொடர் விசாரணையில், மாநகரில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த கும்பல் நகை பறித்தது தெரியவந்தது.