சேலம், அக்.25: சேலத்தில், கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி உடையாப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்க வில்லை.