கல்லூரி மாணவி கடத்தல்

சேலம், அக்.25:  சேலத்தில், கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி உடையாப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து அவரது தந்தை அன்னதானபட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை தும்பல் பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: