திருவில்லிபுத்தூர், அக். 25: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.25 லட்சத்து 24 ஆயிரத்து 104 கிடைத்தது இதுவே முதன் முறையாகும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்பதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா ழுழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் செலுத்துவார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.