சென்னை: சாலை விபத்து வழக்குகளுக்காக நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் ரூ.77 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. சாலை விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் இழப்பீடு கோரி தொடர்ந்து நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிப்பதற்காக லோக் அதாலத் ஒன்றை சென்னை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் நீதிபதி ஜெயந்தி ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி லோக் அதாலத் நேற்று சட்ட பணிகள் ஆணையத்தில் நடைபெற்றது.