திருப்புத்தூர், அக். 23: திருப்புத்தூர் பெரிய கண்மாயிலிருந்து நாட்டு வாய்க்கால்கள் மூலம் சீதளி தெப்பக்குளத்திற்குச் செல்லும் வரத்துக் கால்வாய் பணிகளை சீரமைக்க கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் பணிகள் துவங்கியது.
திருப்புத்தூர் பெரியகண்மாய் பெரியமடையிலிருந்து திருத்தளிநாதர் கோயில் சீதளிகுளம் நிரம்புவதற்கான வரத்துக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. போதிய மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு இக்குளத்திற்கான வரத்துக் கால்வாய் மற்றும் வயல்களுக்குச் செல்லும் நாட்டு வாய்க்கால்களும் பராமரிப்பின்றி அழிந்தன. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு கால்வாய் தடயமில்லாமல் போனது.