குளச்சல், அக் .23: மதுரை மண்டல கனிம வள அதிகாரி ஸ்ரீதர் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று குமரி மாவட்டத்தில் தீவிர ரோந்து சென்றார். மண்டைக்காடு பகுதியில் செல்லும் போது கூட்டுமங்கலம் பாலம் அருகில் பாறாங்கற்களை ஏற்றி சென்ற ஒரு டிப்பர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது பாறாங்கற்கள் எடுக்கும் அனுமதி காலவதி முடிந்து 15 நாட்கள் ஆகி, புதிதாக அனுமதி பெறாமல் கொண்டு சென்றது தெரிய வந்தது.