கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் சார்பில் நவராத்திரி கொலு மற்றும் சரஸ்வதிதேவிக்கு தினந்தோறும் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் கல்வி நலத்திற்கும், உடல் நலத்திற்காகவும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவை தாளாளர் சங்கீதாஅன்பரசன் துவக்கி வைத்தார். மேலும் ஏழு பிறப்பை குறிக்கும் வகையில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்ததை ஏராளமானோர் பார்வையிட்டனர்.