திருப்புத்தூர், அக். 18: திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் அக்.24ம் தேதி நடைபெறவிருக்கும் குருபூஜைககாக நடைபெறும் பணிகளை கோட்டாட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார். வெள்ளையரை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்கு முதல் போர்ப்பிரகடனம் செய்து இன்னுயிர் ஈந்தவர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள்.இவர்களுடன் சேர்த்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை வெள்ளையர்கள் திருப்புத்தூரில் 1801ம் ஆண்டு தூக்கிலிட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட 217ம் ஆண்டு நினைவு நாள் அக்.24ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும்,