போச்சம்பள்ளி, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தமிழகத்தில் இரண்டாவது ெபரிய சந்தையாக திகழ்வது போச்சம்பள்ளி வாரச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை கூடுவது வழக்கும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாக, கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருவர். தமிழகத்திலேயே தங்கம் விற்கப்படும் ஒரே சந்தை என்றால் அது போச்சம்பள்ளி சந்தை மட்டுமே. போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டி பஞ்சாயத்தில் குவியும் குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் அள்ளிசென்று போச்சம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் மலைபோல் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் பிளாஸ்டிக் பைகள் எரியூட்டும்போது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.