கட்டிட வர்ணம் பூசுவோர் நலச்சங்க கிளை துவக்கம்

ஓசூர், அக்.17: ஓசூர் வட்டார கட்டிட வர்ணம் பூசுவோர் நலச்சங்க கிளை துவக்க விழா, தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓசூர் சங்க தலைவர் ராஜ்கோபால் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர்பாபு, பொருளாளர் ஈஸ்வரன், தில்லை, மார்கண்டன் முன்னிலை வகித்தனர். இந்த விழாவின்போது தேன்கனிக்கோட்டை கிளை சங்க தலைவர் டேவிட், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் முனிராஜ், துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் சாம்ராஜ், நீலமேகன், பிரபாகரன், கருணாகரன், சின்னையன், சேகர், மணி, பிரகாசம், சின்னகூலன், நாராயணன், மரியசூசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: