மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

கிருஷ்ணகிரி, அக்.17: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித்குமார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பையனப்பள்ளியில் தங்கியிருந்து கூலி வேலை செய்கிறார். இவருக்கு ரவிக்குமார் (4) என்ற மகன் உண்டு. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்ஒயரை தொட்டதாக தெரிகிறது. இதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். கந்திகுப்பம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: