திருவேங்கடம், அக். 11: திருவேங்கடம் அருகே சகதிகாடான சாலையில் மாணவ, மாணவிகள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மேலமரத்தோணி மற்றும் கீழமரத்தோணியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து கலிங்கப்பட்டிக்கு செல்ல நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. மேலும் கலிங்கப்பட்டியில் இருந்து மரத்தோணி, சுப்புலாபுரம் வழியாக கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றால் தூரம் குறைவு என்பதால் தினமும் 500க்கும் மேற்பட்ட மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையானது பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டு வருகிறது.