கரூர், அக். 10: கரூர் வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரையை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு ரத யாத்திரை பயணித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று காலை அரவக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் கரூர் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தது.