சென்னை: சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையால் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் விரைவாக 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒப்புதலை வழங்க வேண்டும். முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்தார் என்று கூறி எம்எல்ஏ கருணாஸை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. அதைவிட மிக மோசமாக உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சனம் செய்ததோடு பொது அமைதிக்கு பங்கம் விளவிக்கும் வகையில் பேசிய, எந்த ஒரு மக்கள் பிரதிநி பதவியையும் வகிக்காத பாஜவின் எச்.ராஜாவை கைது செய்யாமல் சுதந்திரமாக விட்டுள்ளது.