×

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், ெசப்.25: ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நேற்று சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் சீரான குடிநீர் வழங்காமல் குடிநீர் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியதையும், சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சுபா, மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் சுல்தான்பாஷா, நகர செயலாளர்கள் சீனிவாசன், மாது, மாநில செயற்குழு உறுப்பினர் சோலை.சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் குமாரசாமி, மேஸ்திரி முருகன், இன்பவேள், மாவட்ட பொருளாளர் மாணிக்கம், கமலா கருப்பண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் கணேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை