சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 காலியிடத்துக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (சாந்தோம்) தொடங்க உள்ளது. எனவே, இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியிருந்தால் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வரும் 24ம் தேதி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.