வத்திராயிருப்பு, ஆக. 14: வத்திராயிருப்பு அருகே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சுந்தரமகாலிங்கம் கோவில் வரை மதுரை மாவட்ட போலீஸார் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறை கேட் பகுதியில் இருந்து வண்டிப்பண்ணை தற்காலிக பஸ்நிலையம், ராம்நகர், மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம், வத்திராயிருப்பு, மாவூற்று உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் நேற்று நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டத்துக்கு பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என போலீசார் கூறி, நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வனத்துறை கேட் பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகள் முழுவதையும் அடைக்க வேண்டும் என கெடுபிடி காட்டினர்.