போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

போச்சம்பள்ளி, ஆக 14: போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையை நாம் தமிழர் கட்சியினர் தூய்மைப்படுத்தினர். அவர்கள், குப்பைகளை அகற்றியும், வளாகத்தை சுற்றி வேம்பு,  புங்கமரம் அரசமரம் என 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். பின்பு  மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த  வேண்டாம். அதனால் பல நோய்கள் வரும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின்   கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல செயலாளர் கரு.பிரபாகரன்,

சுற்றுச்சூழல் பாசறை  செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சக்திவேல்,  பர்கூர் தொகுதி செயலாளர் கருணாகரன், ஊத்தங்கரை தொகுதி பொருளாளர் விஸ்வா  மற்றும் பிரேம், பிரவீன், வெங்கடேஷ், ஜாபர், சரவணன், பிரேம்குமார்,  மாரிமுத்து, மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை நாம் தமிழர் கட்சி  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: