கிருஷ்ணகிரி, ஆக.14: பாரூர் எஸ்ஐ சம்பூரணம் மற்றும் போலீசார், குடிமேனஅள்ளி மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(38), மகேந்தி ரன்(40), ராஜா(55) ஆகியோரை கைது செய்தனர். சக்திவேல்(45), மாதன்(35), திருப்பதி(30) ஆகிய மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.