கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் ஆனந்த் நகரில் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இப்போட்டியை தாளாளர் மைக்கேல்காட்வீன் தலைமையேற்று நடத்தி வைத்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் பிலிப் வரவேற்றார். போட்டியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் வயதிற்கேற்றவாறு குழுக்களாக பிரிந்து வண்ண உடையுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவகுப்பினை செய்து காண்பித்தனர். ஒலிம்பிக் ஜோதியை மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றி கொண்டு வந்தனர்.