×

பேளகொண்டப்பள்ளி கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

தேன்கனிக்கோட்டை, ஆக. 14: தளி அருகே பேளகொண்டப்பள்ளி கூட்டுறவு சங்க தேர்தலில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மேற்கு மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பேளகொண்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  தலைவர், துணை தலைவர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த கொமாரணப்பள்ளி ராஜசேகரரெட்டி தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த கொத்தஜிகூர் சென்னகிருஷ்ணாரெட்டி துணை தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜசேகர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ மற்றும் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, தளி முன்னாள் சேர்மேன் சந்திரப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். கொமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவருக்கு முதன் முதலாக பேளகொண்டப்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவராக நியமிக்க உறுதுணையாக இருந்த மாவட்ட செயலாளருக்கு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு