கிருஷ்ணகிரி, ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி நாளை (15ம் தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.