தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வடபழனி, கோயம்பேடு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றனர். வர்தா புயலின்போது இப்பேருந்து நிலையத்தின் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த மேற்கூரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால், பயணிகளிடம் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது. காலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கிடக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களும் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.