கிருஷ்ணகிரி, ஆக.13: ஆகஸ்ட் 17ம் தேதி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது என வி.சி. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் ஓசூர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர்கள் மோகன், ஓசூர் வெங்கடேஷ், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தியாகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் வீதம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது.