ஒட்டன்சத்திரம், ஆக. 13: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயத்தில் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் முடிந்து நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் 34 பேர் போட்டியிட்டதில் 11 பேர் வெற்றி பெற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா அலுவலகத்தில் நடைபெற்றது.