பழநி, ஆக. 13: சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார், செயலாளர் மருது முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஹரிஹரன் வரவேற்றார்.கூட்டத்தில், பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 வருடங்களுக்கு மேலாகிறது. எனவே கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.