வீரவநல்லூர், ஆக. 13:வண்டல் ஓடை நீர்தேக்கத்தில் இருந்து புதிதாக கிளை கால்வாய் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே வண்டல் ஓடை நீர்த்தேக்கம் உள்ளது. இங்கிருந்து மலையான்குளம் பிரிவு மூலமாக மங்கம்மா சாலை வழியாக செவ்வாழை ஓடை, சமந்தான்குளம், ஓனான்குளம், திருவிருத்தான்புள்ளி ஊரணி, வேலியார்குளம், கலியன்குளம், கரிசல்பட்டி குளம், கூட்டாம்புளி குளம் மற்றும் ஆத்தியான்குளம் ஆகிய 9 குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் புதிதாக கிளை கால்வாய் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.