ஊர்மேலழகியான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு

செங்கோட்டை, ஆக. 13: ஊர்மேலழகியான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கடையநல்லுர் ஒன்றியம், ஊர்மேலழகியான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  தேர்தல் அலுவலர் அழகு சுந்தரம் தலைமையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது, இதைத்தொடர்ந்து தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் அமமுக புறநகர் மாவட்ட அவைத்தலைவர்  பொய்கை  மாரியப்பன் 3வது முறையாக தலைவராகவும், மாசானம் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முருகன், ராமலிங்கம், சேர்மக்கனி, சுமதி, குலசேகரன், பரமசிவன், சிதம்பரவள்ளி, இசக்கியம்மாள், சோமசுந்தரி மற்றும் செங்கோட்டை நகர  அமமுக செயலாளர் செங்கை முத்தையா, அவைத்தலைவர் முத்துவேல், புளியரை ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் பெரிய துரை, லியாகத் அலி, மகாராஜன் பாராட்டினர். இதே போல் சார்பு அணி நிர்வாகிகள், பெருமையா பாண்டியன், கோதர்ஷா, சிவசந்திரன், பேரூர் செயலாளர்கள் நாகூர் மைதீன், திருப்பதி,காஜா செய்யது ஒலி, பரமசிவன், ஊராட்சி செயலாளர்கள், முருகன் குணசேகரன் ,சண்முகம், கிளைச் செயலாளர்கள் சுப்பையா முத்தையா புண்ணியமூர்த்தி, முப்புடாதி ராமகிருஷ்ணன், ஆறுமுகம், ராமலிங்கம், மாணிக்கம், ராசையா உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

Related Stories: