செங்கோட்டை, ஆக.7: செங்கோட்டை அருகே வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.செங்கோட்டையை அடுத்துள்ள பூலங்குடியிருப்பு மண்டப தெருவை சேர்ந்தவர் இசக்கி மனைவி திருமலையம்மாள் (51). இவர் கடந்த மார்ச் 8ம் தேதி வீட்டில் தனியாக இரவில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோவை திறந்து ரூ ஒரு லட்சத்தை கொள்ளையடித்தார். இதனை பார்த்து கூச்சலிட்ட திருமலையம்மாளின் கழுத்தை அரிவாள்மனையாள் அறுத்ததோடு அவரது தலையிலும் பலமாக தாக்கி விட்டு மர்மநபர் தப்பிச்சென்றார்.