சூளகிரி, ஜூன் 21: சூளகிரி மேலுமலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மேலுமலையில் இருந்து கோபசந்திரம் வரையில் பெங்களூரு தேசிய நெஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் வாரத்தில் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் உயிர்பலியும் உண்டாகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித பீதியுடனே செல்கின்றனர் தேசிய நெஞ்சாலையில் அதிவேகம், குடிபோதையில் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது, ஒரு வழி பாதை என விதிகளை மீறி செல்வது போன்றவற்றால் விபத்து எற்பட்டு உயிர்பலி உண்டாகிறது.