×

டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி பரிதாப பலி

தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் வெங்கடேஷ் (32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17ம் தேதி தன்னுடைய டூவீலரில் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென டூவீலர் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்றிரவு அவர் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு